கள்ள வச்சு தமிழ்நாட்டுல எவ்ளோ பிரச்சனை. ஒருபுறம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்( Beer ) எமது உணவு மற்றும் உரிமை என கூறுகிறார், மறுபுறம் கள் ஒரு போதை பொருள் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இதுல நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் கள் மற்றும் பனை மரங்களுக்காக எதிர்த்து பேசியவர்கள் எல்லாம், இன்று மௌனமாக இருக்கிறார்கள்.
இந்த கள் அப்படிங்கறது தமிழர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்றும், இந்த கள்ளுக்கு பின்னாடி இருக்கக்கூடிய அரசியல் என்ன மற்றும் இந்த கள்ளை தடை செய்வதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பின்வருமாறு பார்க்கலாம். தொடர்ந்து படிக்கவும்…
What Is Beer
கள்என்பது தமிழர்களுடைய வாழ்வியலில் கலந்த ஒரு உணவு.
இன்று வரையிலும் கள் உணவாகத்தான் அனைத்து இடங்களிலும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு சில இடங்களில் கள்ளை ஒரு போதைப் பொருளாக பார்க்கின்றன.
பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட, கள் என்பதை ஒரு உணவாக கருத்தில் கொள்ள வேண்டும் மற்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இந்தக் கள்ளானது வரலாற்றுக்கு முன்னதாகவே ஒரு உணவுப் பொருளாக பார்க்கப்பட்டு வந்துள்ளது.
இந்தக் கள் தமிழர்களினுடைய வாழ்வுகளில் கலந்த ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது.
Starting Of Beer
உலகத்தில் உள்ள அனைத்து பண்பாடுகளை எடுத்து பார்த்தோம் என்றால், அதில் மது என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
இந்த கள் எங்கிருந்து தொடங்குகிறது என்றால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த கொடுமணல் அகழாய்வுகளை பார்க்கின்ற பொழுது, அதில் நிறைய பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
அதில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை பார்க்கின்ற பொழுது தன், பெண், நீர் அதாவது குளிர்ச்சியான வெள்ளையான நீர் நிறைந்த பானையாக அது இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த குளிர்ச்சியான வெள்ளையான நீர் என்பது கள்ளைத்தான் குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, இது கள் வைக்கப்பட்டிருந்த பானை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சங்க கால இலக்கியங்களில் கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நிறைய இடங்களில் நாம் பார்க்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்,
கள் என்பது அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாக இருந்து உள்ளது மற்றும் பெண்கள் இதனை அதிகமாக விரும்பியுள்ளனர் என்பது புரிகிறது.
அன்று இருந்த அரசர்கள் கொண்டாட்டத்தின் போது கள்ளை அதிகம் பயன்படுத்தி வந்தனர் மற்றும் கடைவீதிகளில் கள்ளு கடை என்ற ஒன்று தனியாகவே இருந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த கள்ளு கடைகளை பெண்களை நடத்தி வந்து வந்தனர். சில சமயங்களில் நடக்கக்கூடிய சண்டைகளை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு பானம் என்றால் அது கள் தான்.
The Medicine Of Beer
தமிழர்களின் தொன்மையான மருத்துவமான சித்த மருத்துவத்தில் கள்ளினுடைய பயன்களை விரிவாக கொடுத்துள்ளனர்.
- கள் என்பது உடலுக்கு நல்லது.
- சிறுநீர் போக்கிற்கு கள் மிகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது
- உடல் வலி மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.
தமிழர்களின் வாழ்வியலில் கள் எவ்வளவு முக்கியம் பங்கு வகித்தது என்பதனை அதன் பெயர்களை வைத்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
Alternative Name Of Beer
இஞ்சி, நாழி, தேங்கு, முருங்கு, தோப்பி, நொச்சி, புளி, கீரை, காய்கறி, முட்டை, பசு, எருமை, ஆடு, சாம்பல், மண், பாலை, புன்னை, நெய்தல், நெட்டல், பாசி, புள்ளி, ஆலை, மண்டபம், நெருப்பு, முளைக்கிழங்கு, மரம், புல், முளைச்சி, சிக்கன், களரி, பனைவீடு, பழமுதல், இருசக்கர வாகனம், ஆடைகள், அழகு சாதன பொருட்கள், வாசனை பொருட்கள், பசி, கனியில் சாரும், ஆலை மற்றும் சாம்பு போன்ற பெயர்கள் கள்ளுக்கு உண்டு.
தமிழர்கள் பனைமரத்திலிருந்து மட்டுமே கள்ளை இறக்குமதி செய்யவில்லை. மாறாக, அரிசி வகையில் இருந்தும் கள்ளை பிரித்தெடுத்தனர்.
தென்னை மரம், அத்தி மரம் மற்றும் கள்ளிச்செடி அதிலிருந்து கூட கள்ளை எடுத்து குடித்து வந்தனர்.
இத்தனை வகைகளிலிருந்து கள்ளை எடுத்தாலும், அதில் முதன்மை வகிக்கிறது பனைமரம். கள்ளை எவ்வாறு எடுக்கிறார்கள் என்றால், இதை எடுப்பதற்கு மூன்று கருவிகள் தேவைப்படுகிறது.
ஒன்று அருவா, இன்னொன்று பானை, மற்றொன்று இடுக்கி ஆகிய மூன்றும் இருந்தால் போதும் நீங்கள் கள்ளை மரத்திலிருந்து இறக்கலாம்.
பனை மரத்திலிருந்து பாலை என்ற ஒரு பகுதியில் அருவாவை வைத்து சீவி விட்டு, பானையை அந்த சாறு வலியும் இடத்தில் கட்ட வேண்டும்.
இந்தப் பாலையில் இரந்து வரக்கூடிய நீரானது பதநீர் எனப்படும். மறுநாள் காலையில் இந்த நீரை சேகரித்து சுண்ணாம்பு கலந்து சேர்த்தால் இது கள் எனப்படும். இந்த கள்ளை எடுத்துப் பருகுவர்.
Why Ban Beer
இப்படி தமிழர்களுடைய வாழ்வில் கலந்த ஒரு உணவான கள் ஏன் தடை செய்யப்பட்டது?
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, கள்ளானதும் அவ்வாறு தான் செயல்பட்டது.
இந்தக் கள்ளைஅளவாக சாப்பிட்டு வந்தால் அது உணவாகவும் இருக்கும், போதையாகவும் இருக்கும்.
கள் ஒருத்தருக்கு உணவு என்ற போதிலும், சாமானிய மக்களுக்கு அது ஒரு போதை பொருளாக பார்ப்பதற்கு காரணம் இருக்கின்ற பொருளை எல்லாம் விற்று கள் வாங்கி குடித்ததன் விளைவு அதை ஒரு போதைப் பொருளாக மக்கள் பார்க்கத் தொடங்கினர்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றன என்ற காரணத்தினால் கள்ளை தடை செய்ய வேண்டும் என இருபதாம் நூற்றாண்டில் ஒரு முன்னெடுப்பாக பார்க்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலகட்டங்களில் கள் தடை செய்யப்பட்டிருந்தது. காரணம் என்னவென்றால், அவர்கள் வழங்கக்கூடிய மதுபானங்களை ஓதிய வருமானம் இல்லாத காரணத்தால் கள்ளை தடை செய்தனர்.
History Of Beer
காந்தியடிகள் அவர்கள் கள்ளுக்கு அடிமையானவர்களை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்துகிறார், அது கள் உண்ணாமை போராட்டம்.
இந்தக் கள் உண்ணாமை போராட்டத்தில் கள் மட்டுமே உண்ணக்கூடாது என்று அல்ல, கள்ளை போன்ற பிற மதுபானங்களை அருந்தக் கூடாது என்பது இந்த போராட்டத்தின் அடிப்படை நோக்கம்.
மலேசியா, சைனா போன்ற இடங்களில் சம்பளத்திற்கு பதிலாக கள்ளை ஊதியமாக கொடுத்து வேலையை வாங்கி இருந்தனர்.
அந்த காலகட்டத்தில் இருந்த காங்கிரஸ் அரசுகளுக்கு இது தெரிய வருகிறது. இந்த கள்ளை ஒன்று வேலை செய்பவர்கள் உடல்நிலை பெரிதும் பாதிப்பு அடைந்ததை அவர்கள் கவனிக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகள் மது போதைக்கு மட்டுமே உழைக்கும் மக்கள், கிட்டத்தட்ட அவங்களுடைய உழைப்பில் இருந்து வரக்கூடிய 50 சதவீதத்துக்கு மேலான வருமானத்தை செலவு செய்கின்றனர்.
இதன் காரணமாக இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கள்ளை தடை செய்ய வேண்டும் என போராட்டம் வெடித்தது.
அன்று இருந்த மதரா சமஸ்தானம் இந்த கள் போராட்டத்தில் முதன்மை வகுத்தது.
அந்த ஊரில் உள்ள மக்கள் ஒருவர் கூட இந்த கள்ளை விரும்பாமல் இருந்தனர் இதன் காரணமாக மதரா சமஸ்தானம் முதன்மை வகித்தது.
எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆட்சியில் இந்த கள்ளை தடை செய்தனர்.
காரணம் என்னவென்றால், இதில் அதிகமான கலப்படம் இருக்கிறது என்று கூறி இந்த கள்ளை தடை செய்தனர்.
அன்று செய்யப்பட்ட தடையானது இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ள சாராயத்தில் 40 பேர் உயிரிழந்தனர் அல்லவா இவர்களை கட்டுப்படுத்துவதற்காக தான் கள்ளை தடை செய்துவிட்டு சாராயம் போன்றவற்றை இந்த அரசு எடுத்து நடத்தி வருகிறது என அவர்கள் விளக்கம் தெரிவிக்கின்றனர்.
கள்ளில் இருக்கக்கூடிய போதை தன்மை ஏழு சதவீதம் அளவிற்கு மட்டுமே இருக்கும். இந்த போதைத் தன்மை நான்கு மணி நேரம் மட்டுமே தாக்கு பிடிக்கும்.
இப்படி இருக்கப்பட்ட ஒரு போதை வஸ்து உண்மையில் கலப்படம் செய்ய முடியுமா?
Beer Of Adulteration
கள்ளில் கலப்படம் செய்ய முடியுமா முடியாதா. கள்ளில் கலப்படம் செய்ய முடியும்.
கள்ளில் போதுமான அளவு போதை இல்லாத காரணத்தால் இதன் போதை தன்மையை அதிகப்படுத்த பிரண்டையை வெட்டி துண்டு துண்டாக கள்ளில் போடுவார்கள், புளித்த பழங்கள் அல்லது புளிப்பு தன்மை கொண்ட படங்களை கள்ளில் கலக்குவார்கள்.
இது மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு அளிக்காத ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இதை மட்டும் தன் அவர்கள் கள்ளில் கலந்தார்கள் என்றால் இல்லை.
இதில் ரசாயன முறையில் போதையை அதிகப்படுத்தினார்கள்.
அதிகளவு போதை தன்மை கொண்ட ரசாயனங்களை கள்ளில் கலந்து விற்பனை செய்யப்படுவதால் அதிகமான மக்கள் இதனை வாங்கி பருகி வந்தனர்.
கேரளாவில் கள்ளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் உரிமை வாங்க வேண்டும்.
கள்ளை இறக்குபவர் கடைகளுக்கு கள்ளை இறக்குவதற்கு மற்றும் தென்னை மரம் பனைமரம் ஆகியவற்றிற்கு உரிமை வாங்கிய ஆக வேண்டும்.
அவ்வாறு உரிமை வாங்கியும் சில தவறுகள் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது கேரளாவில்.
தமிழ்நாட்டில் கள் இறக்குபவர்களை மிகவும் தாழ்த்தப்பட்ட பார்வையில் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது மற்றும் மரம் ஏறுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதன் காரணமாக கள் என்று கேள்விக்குறியாகி இருக்கிறது.
Why Beer Are Not Export
கள் இறக்க ஒருவர் முன் வருகிறார் என்றால் அவர்களை இந்த சமூகம் தடுக்கிறது மற்றும் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே இந்த கள்ளை இறக்க வேண்டும் என விதிமுறை வகுக்கின்றன.
இதன் காரணமாக பனையேறுவது கள் இறக்குவது ஒரு பொதுவான தொழிலாக மாறாமல் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தவர்களின் தொழிலாகவே இருக்கிறது.
ஆங்காங்கே நடக்கக்கூடிய கள் போராட்டமானது பயனற்றது என்றாலும் அதனை போராடுவதற்கான காரணம் என்னவென்றால் பனை மற்றும் பனை சார்ந்த தொழில்களை அதிக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே தான்.
பதநீர் எடுப்பதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் கிடைக்கிறது பதநீர் வேண்டுமென்றால் பானையை மரத்தில் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
மரத்தில் பானையை கட்டி விட்டால் அது கள்ளுக்காக தன் கட்டப்பட்டது என ஒரு சிலர் கிளம்பி விடுகின்றனர் இதன் காரணமாகவே பனை சார்ந்து துளிகள் கள்ளின் மூலமாக முடக்கப்பட்டு இருக்கிறது இன்று வரை.
இந்தப் பனை மட்டும் பனை சார்ந்த தொழில்களை மீட்டெடுப்பதற்காகவே கள் என்ற ஒரு தடையை நீக்க வேண்டி இருக்கிறது.
Conclution
கள்ளுக்கு தடையை நீக்கினால் கள்ள சாராயம் வரும் கள்ள சாராயம் வந்தால் உயிரிழப்புகள் நடைபெறும் இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறது தமிழக அரசு.
இந்த தவறுகளை முறையாக கண்டறிந்து இந்த தவறு நடக்காதவாறு முறையாக அரசு கண்டறிந்து இந்த பனை மற்றும் படை சார்ந்த தொழில்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
கள்ளும் சரி பனையும் சரி தமிழர்களுடைய அடையாளம் அதை எந்த ஒரு காலத்திலும் எக்காரணத்திற்காகவும் நம்ம விட்டு விடக்கூடாது. நன்றி!…
மேலும் படிக்க: The Untold Story of 90’s Memories